முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 வருடங்களுக்குப் பின் தன்னை வளர்த்த பெண்ணிடம் முத்தமழை பொழிந்து பாசத்தை காட்டிய சிங்கம்: வீடியோ வைரல்

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

பார்சிலோனா,ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண் சிங்கத்தை வளர்ந்து வந்திருக்கிறார். ஆனால் இப்படி வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பது உலகெங்கும் பொதுவான விதி. இந்த பெண் வீட்டில் சிங்கம் வளர்ப்பது அந்நாட்டு அரசுக்கு தெரிந்து விட்டது. அதனால் வீட்டுக்கு வந்து, அந்த சிங்கத்தையும் பிடித்து கொண்டு போய் மிருக காட்சி சாலை கூண்டில் அடைத்து விட்டது அரசாங்கம். சிங்கத்தை பிரிந்து அந்த பெண்ணாலும் இருக்க முடியவில்லை.. பெண்ணை பிரிந்து சிங்கத்தாலும் இருக்க முடியவில்லை.

இப்படியே ஏழு வருஷங்கள் போய் விட்டது. பிறகு ஒருநாள் அந்த பெண், தான் வளர்த்த சிங்கத்தை பார்க்க அனுமதி பெற்று அந்த மிருக காட்சி சாலைக்கு வருகிறார். சிங்கமோ கூண்டில் உள்ளது. அந்த பெண் உள்ளே நுழையும் போதே ஹலோ என்று கூப்பிட தொடங்குகிறார். அந்த ஒற்றை வார்த்தையை கேட்டதும், சிங்கம் இங்குமங்கும் துள்ளி ஓடியது. அப்படியே கூண்டுக்குள்ளிருந்தே அந்த பெண்ணை கட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்கிறது. இந்த பெண்ணும் அந்த சிங்கத்துக்கு முத்தமாக தருகிறார்.இரும்பு கம்பிகளுக்கிடையே தன் முரட்டு கைகளை வெளியே விடடு பெண்ணை இறுக்கி அணைத்து கொள்கிறது சிங்கம். பிறகு வெளியில் வர முடியாமல், அந்த பெண்ணிடம் முழுமையாக இருக்கவும் முடியாமல் தவிப்பில் தரையில் புரளுகிறது. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 2 நிமிஷம்கூட இந்த வீடியோ இல்லை. ஆனால் இவர்களுக்குள் இருந்த 7 வருட பாசப் பிணைப்பு அதில் பளிச்சென தெரிகிறது. இந்த காட்சியை பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து