முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் குறித்து தமிழக அமைச்சருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கஜா புயல் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

கஜா புயல் தாக்கியதில் தமிழகம் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. அதன் பாதிப்புகளை சீரமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, புயலால் ஏற்பட்ட நிலைமை குறித்து அவரிடம் கேட்டறிந்தார். மேலும், தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்  முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து