எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,டெல்டா மாவட்டங்களில் மின் இணைப்பு வழங்க ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரம் மின் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மின்துறை அமைச்சர்.பி. தங்கமணி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலினால் ஏற்பட்டுள்ள மின்தடையை சீர்செய்து, துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, உடனடியாக மின் விநியோகம் வழங்குவது குறித்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கஜா புயலினால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார வாரியத்திற்கு மிக அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்த கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 84,836 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 4,230 கி.மீ தூரம் உயர்மின் பாதையும், 841 மின்மாற்றிகளும், 201 துணைமின் நிலையங்களும் சேதமடைந்துள்ளன. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று (நேற்று) மாலையே மின்சாரம் வழங்கப்படும். இதே போன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கு அதிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டதுடன் அம்மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கஜா புயலினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் பழுதுகளை சரி செய்யும் வகையில் ஆந்திராவிலிருந்து 1000 பணியாளர்கள் கேட்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வர உள்ளனர். இதே போன்று பிற மாவட்டங்களிலிருந்தும் பணிகள் முடித்த 1000 பணியாளர்கள் வர உள்ளனர். இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2000 பணியாளர்கள் கூடுதலாக வர உள்ளனர். இதன்மூலம் நகரப் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளுக்கு படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும்.
கிராமப் பகுதிகளில் அதிகளவு மரங்கள் சாய்ந்துள்ளதால் மரங்கள் அப்புறப்படுத்திய பின்னரே பணிகள் மேற்கொள்ள முடிகிறது. இங்கு கிட்டத்தட்ட 20 உயர்மின் கோபுரங்கள் உள்ளன. உயர்மின் கோபுரங்கள் முழுமையாக சரி செய்தால்தான் மின்சாரம் வழங்க முடியும். 201 துணை மின் நிலையங்களில் 56 துணை மின் நிலையங்கள் நன்றாக உள்ளது. இதுவரை 6 உயர் மின் கோபுரங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 14 உயர் மின் கோபுரங்கள் 3 நாட்களுக்குள் சரி செய்யப்படும். இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் போர்கால அடிப்படையில் மின்விநியோகம் வழங்கப்படும்.இதற்கிடையே கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் தடையின்றி வழங்கப்படும். இப்பணிகளில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அதனையும் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இயற்கை சீற்றத்தினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தமிழக அரசு முழுவதுமாக உணர்ந்துள்ளது. பொதுமக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதன்மூலம் பணிகள் மிக வேகமாக நடைபெறும்.
கடந்த காலங்களில் வர்தா புயல், ஒகி புயல் போன்ற இதை விட அதிக சேதங்கள் ஏற்படுத்திய புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சார வாரியத்திற்கு மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்க்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கணக்கீடப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுக்கும் பணி முடிவடையவில்லை.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு பொருளாதாரம் தடையாக இல்லை என்பதை தெரிவித்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். இதன் மூலம் மீட்புப் பணிகளில் 14,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன் கூடுதலாக 2000 பணியாளர்கள் என மொத்தம் 16,000 பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர். பணியாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே போதுமான அளவு மின்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் போதுமான அளவு மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் பணியாளர்கள் இருக்கின்ற காரணத்தினால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கஜா புயலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையின் மூலம் புயல் கரையை கடக்கும் அதிகாலை நேரத்தில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என முன்கூட்டியே அறிவித்து மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதன்மூலம் பொதுமக்கள் உயிர்பாதுகாக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையால் இன்றைய தினமே குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகர்புறங்களுக்கு இணையாக கிராமப் புறங்களுக்கு மின் இணைப்பு வழங்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த