முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநிலத்தில் பயங்கரம்: கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் நேற்று கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்து...

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து நேற்று மதியம் பாண்டவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று கால்வாயில் தத்தளித்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைசேர்ந்தனர். நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கிய சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

பிரதமர் இரங்கல்

இது தொடா்பாக காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கால்வாயில் மூழ்கியுள்ளது. பேருந்து நீரில் மூழ்கப்போவதை அறிந்த நபர் ஒருவர் பேருந்தில் இருந்து குதித்து உயிர்தப்பியுள்ளார். இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து