முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் பெரியண்ணசுவாமி கோவில் குதிரை திருவிழா

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

அருப்புக்கோட்டை - அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் பெரியண்ணசுவாமி கோவில் குதிரை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். 
 அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் உய்யவந்தம்மன் பொங்கல்விழா மற்றும் பெரியண்ண சுவாமி குதிரை திருவிழா.  மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.  இந்தாண்டு செட்டிக்குறிச்சியில் உள்ள அரண்மனை திடலில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.  இரண்டாம் நாள் திருவிழாவில் பெரியண்ணன் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலித்தார்.  இதற்காக குதிரையை மலர்களால் அலங்காரம் செய்து பொதுமக்களுக்கு பார்வைக்கு வைக்கப்பட்டது.  பின்னர் குதிரை ஊர்வலம் செட்டிக்குறிச்சி கிராமத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக செல்லப்பட்டது.  மேலதாளங்களுடன் நடைபெற்ற குதிரை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  விழாவில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திரைப்பட நடிகர்கள்  உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கே.வி.கே.ஆர். பிரபாகரன் மற்றும் கிராமபொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து