முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகர் கைது: அரசியல் தலைவர்களின் முகமுடிகள் கிழிக்கப்படும் என்கிறார் பிரதமர்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர் : இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் புதிய திருப்பமாக இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டு சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இடைத்தரகர் கைது மூலம் அரசியல் தலைவர்களின் முகமூடிகள் கிழிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை 7-ம் தேதி 200 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. சுமர்பூர் நகரில் நேற்று பா.ஜ.க. சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

காங்கிரஸ் தலைவருக்கு அவர் கட்சியின் தலைவர்கள் பெயரே சரியாகத் தெரியவில்லை. ஜாட் இனத் தலைவரும் புகழ்பெற்ற விவசாயியுமான மறைந்த கும்பராம் ஜியை ராகுலுக்கு தெரியவில்லை. கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி, சமூகத்தில் பல்வேறு பிளவுகளை ஏற்படுத்தி விட்டது. முதலில் 70 ஆண்டுகளில் நீங்கள் செய்ததைப் பட்டியலிடுங்கள். அதற்குப் பிறகு 4.5 ஆண்டுகளில் நாங்கள் என்ன செய்தோம் என்று கேளுங்கள்.

காங்கிரஸின் நான்கு தலைமுறைகளும் ஊழலைத் தங்கள் நீதியாக மாற்றி விட்டன. நம்முடைய அத்தனை பிரச்சினைகளுக்கும் ஊழலே ஆணி வேராக இருக்கிறது. ஊழல் ஒரு கரையான். அதை முழுமையாக ஒழிக்க வேண்டும். அகஸ்டாவெஸ்ட்லேண்ட் இடைத்தரகர் கைதின் மூலம் நாம்தார்களின் முகமூடிகள் கிழிக்கப்படும் என்றார் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து