முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் - தெலுங்கானாவில் விறு விறுப்பான வாக்குகள் பதிவு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர், 200 தொகுதிகள் கொண்டு ராஜஸ்தான் மற்றும் 119 தொகுதிகள் கொண்ட தெலுங்கானா  மாநிலங்களில் நேற்று ஒரேகட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடந்தது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்ட சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இங்கு தேர்தலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஆயுட்காலத்தை கொண்டிருந்த தெலுங்கானா சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தீர்மானித்தது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த முடிவை மேற்கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷன் தெலுங்கானா சட்டசபைக் கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நடக்கும் தேதிகளை வெளியிட்டது.முன்னதாக இந்த 2 மாநிலங்களிலும் கடந்த புதன்கிழமை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலையொட்டி 2 மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

விறு விறு வாக்குப்பதிவு

200 சட்டசபை தொகுதிகளை  கொண்ட ராஜஸ்தானில் நேற்று காலை  8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  மதியம் 1 மணி நிலவரப்படி 41.53% வாக்குகள் பதிவாகி இருந்தது.  மதியம் 2 மணி நிலவரப்படி சுமார் 55% வாக்குகள் பதிவாகி இருந்தது.  மாலை 3 மணி நிலவரப்படி  அங்கு 59.43 சதவீத வாக்குகள் பதிவாகின.  119 இடங்களை கொண்ட  தெலுங்கானா சட்டசபைக்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்வர் சந்திரசேகரராவ் சித்திபெட் தொகுதியில் அவரது வாக்கை பதிவு செய்தார். அமைச்சர் கே.டி.ராமா ராவ் ஹைதராபாத்தில் அவரது வாக்கை பதிவு செய்தார். இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிலிம் நகர் கலாச்சார மையத்தில் வாக்களித்தார். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 49.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மணி நிலவரப்படி 56.17 சதவீத  வாக்குகளும் பதிவாகி இருந்தன.

11-ம் தேதி முடிவு வெளியீடு...

ஓட்டுப் பதிவு முடிந்த பின்னர் இந்த மாநிலங்களிலும் ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகியவற்றுடன் சேர்த்து ஓட்டு எண்ணிக்கை வருகிற 11-ம் தேதி நடைபெறுகிறது.  அன்று மதியம் 2 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து