முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதிக்க அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய அ.தி.மு.க.வினருக்கும் முதல்வரிடம் நிதி உதவி வழங்கிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் 20 தொகுதிகளில் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தல் சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றுவது குறித்தும் விவாதிக்கப்படுகின்றன. இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தவிர அமைப்பு செயலாளர்கள், பிற பிரிவுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து