முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு: பசுமை தீர்ப்பாயம்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக நடந்த வன்முறை சம்பவங்களையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்பாயத் தலைவர் ஏ.கே. கோயல் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து