எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஆடு வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் பெறும் நிலை பெருமளவில் நிலவுகிறது. சிறு பண்ணையாளர்கள் வளர்ப்பு மாடுகளில் நோய் தாக்கம் ஏற்படும் போது நவீன மருத்துவ முறைகள் மற்றும் மருந்து பொருட்களால் அவர்களுக்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது.
கால்நடை வளர்ப்போர் தாங்களாகவே ஆண்டிபயாடிக் எனப்படும் எதிருயிரி மருந்துகளை பயன்படுத்துவதால் உயிர் கொல்லி எதிர்ப்பை உண்டாக்கும். அதாவது மருந்துகள் நோய் எதிர்ப்பு தன்மையை இழந்து விடுகின்றன. உணவு பயன்பாட்டிற்காக பராமரிக்கப்படும் கால்நடைகளில் உபயோகப்படுத்தப்படும் ஒவ்வொரு மருந்திற்கும் வித்டிராயல் பிரீயட் எனப்படும் விலக்கு காலம் கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
அதாவது கடைசியாக மருந்து உட்செலுத்திய பின் குறிப்பிட்ட கால அளவிற்கு கால்நடைகளிலிருந்து பெறப்படும் உணவு பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் இவற்றில் உள்ள மருந்துப் பொருட்களின் எச்சம் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தால் பரிந்துரைக்கப்படும் மரபுசார் மூலிகை மருத்துவ முறைகள் சிறு பண்ணையாளர்களுக்கு எளிய, அதிக பொருட் செலவில்லாத மருத்துவ முறையாக அமைவதுடன் மருத்துவப் பொருட்களின் எச்சங்கள் இல்லாத இறைச்சி உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. குடற்புழு நீக்கம் வளர்ந்த ஆடுகளுக்கு 2 அங்குல நீல சோற்றுக் கற்றாழையின் முள்ளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
வயிறு உப்புசம்
வெற்றிலை - 3, தரமான மிளகு - 10, பெருங்காயம் - 5 கிராம், இஞ்சி - 50 கிராம், சீரகம் அரை தேக்கரண்டி ஆகியவற்றை நன்றாக அரைத்து நாட்டு சர்க்கரை 50 கிராம் சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை என இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.
சளித் தொல்லை
துளசி, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி, ஆடுதொடா, தூதுவளை தலா இரு இலை, மஞ்சள், மிளகு, சீரகம் தலா ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை அரைத்து அதோட 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவேளை என இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.
கழிச்சல்
சின்ன சீரகம், கசகசா, வெந்தயம் தலா 10 கிராம், மிளகு - 5 எண்ணிக்கை, மஞ்சள் தூள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து நீர் தெளித்து இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 பல் வெங்காயம், 2 பல் பூண்டு, 10 கறிவேப்பிலை மற்றும் 100 கிராம் கருப்பட்டியுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி உப்பினில் தோய்த்து நாக்கின் மேல் தடவி உட் செலுத்த வேண்டும். இது நான்கு ஆடுகளுக்குத் தேவையான மருந்து.
பேன், உண்ணி
50 கிராம் வசம்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்து நசுக்கி அதோடு நான்கு ஓமவல்லி இலை, தலா ஒரு கைப்பிடி தும்பை, வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து ஆட்டின் மேல் பூசி காயவிட வேண்டும். பிறகு தேங்காய் நாரால் தேய்த்து கழுவிவிட வேண்டும். மழைக்காலம்இ ஈரமான சூழ்நிலைகளில் இதனை தவிர்க்க வேண்டும்.
குளம்பு புண்
கால் குளம்பினை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரினால் நன்கு கழுவி ஈரத்தை துடைக்க வேண்டும். பின்னர் தலா ஒரு கைப்பிடி துளசி மற்றும் குப்பைமேனி இலை, 4 பல் பூண்டு, 10 கிராம் மஞ்சள் தூள் ஆகிய பொருட்களை அரைத்து 100 மி.லி நல்லெண்ணெயில் வதக்கி ஆறியவுடன் குளம்பில் தடவவும்.
ஆட்டுக்கொல்லி நோய்
சீரகம், வெந்தயம், தலா 10 கிராம், மிளகு 5 எண்ணம் ஆகியவற்றை இடித்து மஞ்சள் தூள் 10 கிராம், பிரண்டை 5 கொழுந்து, பூண்டு 5 பல், முருங்கை இலை ஒரு கைப்பிடி 500 கிராம் கருப்பட்டி ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக நாக்கின் மேல் தேய்த்து கொடுக்க வேண்டும். இதனை நாளொன்றுக்கு மூன்று முறை அளிக்க வேண்டும்.
ஆட்டமை வாய்வழி மருந்து
சீரகம், வெந்தயம், மிளகு தலா 5 கிராம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து ஐந்து கிராம் மஞ்சள்தூள், இரண்டு பல் பூண்டு, தலா ஒரு கைப்பிடி வேப்பிலை, முருங்கை, துளசி திருநீற்றுப்பச்சிலை இலை மற்றும் நிலவேம்பு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உப்பினில் தோய்த்து நாக்கின் மேல் தேய்த்து உட்செலுத்த வேண்டும்.
வெளிபூச்சு மருந்து
மேற்கூறிய மருந்து பொருட்களுடன் தலா ஒரு கைப்பிடி குப்பைமேனி, தும்பை சேர்த்து அரைத்து தலா 100 மி.லி விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆறியவுடன் அம்மை கொப்பளம் உள்ள இடங்களில் தடவ வேண்டும்.
கோமாரி
தலா ஒரு தேக்கரண்டி மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து அதோடு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு பல் பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். அரை மூடி தேங்காயைத் துருவி அரைத்து கலவையோடு சேர்த்து 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட கொடுக்க வேண்டும். இது 5 ஆடுகளுக்கான அளவு. நோய் தாக்கம் உள்ள போது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
மூலிகை மருத்துவம் மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
பயன்படுத்தும் தாவரம் நச்சுத் தன்மை இல்லாதவை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். மருந்துகளை புகட்டும் போது பனைவெல்லம் சேர்த்து பிசைந்து நாக்கின் மேல் சிறிது சிறிதாக தடவி உள்ளே புகட்ட வேண்டும். கால்நடைகளின் இருப்பிடத்தை (கட்டுத்தரை) சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை கட்டுத்தரையில் வசம்பு, மஞ்சள், பூண்டு ஊற வைத்து சுண்ணாம்பு நீர் கலந்து தெளித்து விட வேண்டும். கால்நடைகளுக்கு ஏற்ற எளிய முதலுதவி மூலிகை செடிகளை வீட்டில் வளர்த்து கால்நடைகளுக்கு எளிய மருத்துவ உதவி கிடைக்க செய்வோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.