முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

5 மாநில சட்டசபை தேர்தலில், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசும், தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சியும், மிசோரமில் எம்.என்.எப். கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்பட்டதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த கருத்தை நிராகரித்த ராஜ்நாத் சிங், மாநில அரசுகளின் செயல்பாடுகள் அடிப்படையில்தான் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து