முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி அலையை ஓய வைக்க முடியாது - தமிழிசை

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று தெரிவித்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மோடி அலையை ஒய வைக்க முடியாது என்றார்.

இப்போது சரியாக...

இதுகுறித்து அவர் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது.,

எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது. வெற்றியால் பா.ஜ.க. துள்ளிக் குதிப்பதும் இல்லை. தோல்வியால் துவள்வதும் இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என இயந்திரத்தனமாக குற்றஞ்சாட்டி வந்தனர்.  பா.ஜ.க. வெற்றி பெற்றால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வந்தது. வாக்குப்பதிவு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா ?. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.

பெரிய தலை இல்லை

5 மாநிலத் தேர்தல் முடிவுகளை பற்றி கவலைப்படாமல் நாடாளுமன்ற தேர்தலுக்கு கடுமையாக உழைப்போம். மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை, மோடி அலையை ஓய வைக்கவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து