முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி பத்திரிகையாளர் படுகொலை: ஐ.நா. பொதுச் செயலருடன் துருக்கி அரசு ஆலோசனை

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

அங்காரா : பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக குறித்து ஐ.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப்பின் பொதுச் செயலருடன் ஆலோசனை நடத்தியதாக துருக்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களிடம் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு கூறியதாவது:-

இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இது தொடர்பாக, ஐ.நா.பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் சக வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் பேசியுள்ளோம். இதுகுறித்து மேற்கொண்டு ஆலோசனை நடத்துவோம்.

அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டின்போது, கஷோகி கொலையில் தொடர்புடையவர்கள் குறித்து உண்மையை வெளிக் கொணர, ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உறுப்பு நாடுகள் விரும்பின என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து