முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதால் வரும் 15 மற்றும் 16 தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமானது முதல் மிக கனமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல்பகுதியில் நிலவிவந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று(நேற்று) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள இந்தியப்பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது வரும் 14-ம் தேதி (நாளை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஆந்திரா வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக வரும் 15 மற்றும் 16 தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மீனவர்கள் 13-ம் தேதி (இன்று) தெற்கு வங்கக்கடலின் மத்திப்பகுதிகளுக்கும், 14-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், வரும் 15-ம் தேதி தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து