முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிசோரமில் பூரண மதுவிலக்கு அமல் - முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

அய்ஸ்வால் : மிசோரம் மாநிலத்தில் முதல் வேலையாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மிசோ தேசிய முன்னணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஜொரோம்தங்கா அறிவித்துள்ளார்.

மிசோரமில் 1997-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், 2015-ல் தடை நீக்கப்பட்டு, மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில், மிசோரம் தேசிய முன்னணி கட்சியின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ஜொரோம்தங்கா கூறுகையில், மாநிலத்தில் சாலை வசதி மேம்படுத்தப்படும். முழு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து