முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா மாநில முதல்வராக சந்திரசேகரராவ் இன்று பதவியேற்பு

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : தெலுங்கானா மாநில முதல்வராக 2ஆவது முறையாக சந்திரசேகர ராவ் இன்று  பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டி.ஆர்.எஸ். கட்சியே முன்னிலை வகித்தது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் முடிவுகள் வெளிவரும்போதும், அக்கட்சியின் முன்னிலை விகிதம் அதிகரித்தபடியே இருந்தது.

காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு போதிய ஆதரவு இல்லை. வாக்கு எண்ணிக்கை முடிவில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் டி.ஆர்.எஸ். 88 தொகுதிகளில் வென்றது. அதாவது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அக்கட்சி வெற்றி பெற்றது.

இந்நிலையில் தெலுங்கானா மாநில முதல்வராக 2ஆவது முறையாக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து