முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சக்தி காந்ததாஸ் பதவியேற்றார்

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : ரிசர்வ் வங்கி புதிய  கவர்னராக சக்தி காந்ததாஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல் தனது பதவியை   திடீரென ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவியில் சக்திகாந்த தாஸை (61) மத்திய அரசு   நியமித்தது.

சக்திகாந்த தாஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் பணியாற்றினார். பின்னர் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளராக பதவி வகித்தார். அவர் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், நிதியமைச்சகத்தில் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.

அவரிடம் முக்கிய வருவாய்த் துறை பொறுப்பு அளிக்கப்பட்டது. இதன்பிறகு, பொருளாதார விவகாரத் துறைக்கு அவர் மாற்றப்பட்டார். தற்போது அவர் ரிசர்வ் வங்கியின் 25ஆவது கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னராக சக்தி காந்ததாஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து