முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.8லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

 சிவகாசி, - சிவகாசி அருகே மணியம்பட்டியில் ரூ8.லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
சிவகாசி தொகுதியில் எம்எல்ஏ வளர்ச்சி நிதி, எம்பி வளர்ச்சி நிதி உட்பட பல்வேறு நிதிகள் மூலம் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய சாலைகள், புதிய பாலங்கள், கால்நடை மருத்துவமனைகள், கிராம ஊராட்சி சேவை மையங்கள், சுகாதார வளாகங்கள் என ஒவ்வொறு கிராமத்தி்லும் வளர்ச்சி தி்ட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சிவகாசி அருகே ஊராம்பட்டி ஊராட்சியில் மணியம்பட்டியில் ரூ.8லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்பி, அதிமுக ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை) சுரேஷ், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரநாராயணன் மற்றும் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆரோக்கியம், வேண்டுராயபுரம் காளிமுத்து, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் லயன்கருப்பு(எ)லட்சுமிநாராயணன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் பாண்டியராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து