எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம், கொள்கை, கோட்பாடு ஏதும் இல்லாத தி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார் என்று சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் கடமலை பகுதியில் பொதுமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், கூடமலை பகுதியில் நேற்று பொதுமக்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அம்மாவின் மறைவிற்கு பிறகு, இந்த ஆட்சி கலைந்து விடும். தான் முதலமைச்சராகி விடலாம் என்று கனவு கண்டிருந்தார். அந்தக் கனவு பகல் கனவாகி விட்டது. டி.டி.வி தினகரனும், தி.மு.க.-வின் தூண்டுதலில், இந்தக் கட்சியை உடைக்க ஒரு கட்சியை ஆரம்பித்தார். இன்றைக்கு பாலாஜி என்கிற ஒரு செங்கல் பிடுங்கி சென்று விட்டது. அவர் முதல்வராக வேண்டும் என்று எங்களிடமிருந்து பிரிந்து சென்றார். இப்பொழுது ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று சென்றிருக்கிறார். கடைசியில், யாருடன் நடுத்தெருவில் நிற்கப் போகிறாரோ தெரியவில்லை. இதை எதற்காக சொல்கிறேனென்றால், தி.மு.க.விற்கு கொள்கை, கோட்பாடே கிடையாது, அதிகாரம் மட்டும்தான் அவர்களுக்குத் தேவை.
எல்லாம் வாரிசு...
பாரதீய ஜனதா ஆட்சியின் பொழுது, கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தார்கள். அதற்கு சறுக்கல் வந்தவுடன், காங்கிரசிடம் கூட்டு சேர்ந்து அங்கே மத்திய அமைச்சராக இருந்தார்கள், அவர்களுக்குத் தேவை அதிகாரம் ஒன்றுதான். 14 ஆண்டு காலம் தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்த ஒரு கட்சியான தி.மு.க. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவர்கள் குடும்பம்தான் வளர்ந்தது, கருணாநிதி, அவருடைய பையன், இப்பொழுது பேரனும் வந்து விட்டார். எல்லாம் வாரிசு. அ.தி.மு.க.வில் திறமை இருப்பவர்கள், மக்களுக்கு உழைப்பவர்கள்தான் பதவிக்கு வர முடியும். சாதாரண தொண்டன், விவசாயத் தொழிலாளி கூட வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், வீரகனூரில் செய்தியாளர்களை சந்தித்கையில் தெரிவித்தாவது.,
இன்றைக்கு ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதி, கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். சுறிறுப் பயணம் மேற்கொள்கிறபொழுது மக்கள் எழுச்சியாக வரவேற்பு கொடுத்தார்கள். இப்பொழுது இறுதியாக, தற்போது நடைபெற்றுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற வீரகனூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 15,000 பேர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, 27,092 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கேள்வி : அடுத்து ஒரு புயல் வலுவாக இருக்குமென்று சொல்கிறார்கள், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
பதில் : தற்பொழுது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளபடி எந்த சேதாரமும் ஏற்படாது, ஆனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு முன்னேற்பாடாக அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி : அணை பாதுகாப்பு மசோதாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறீர்கள் ...
பதில் : அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து நாங்கள் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம், அதுமட்டுமல்ல, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் இந்த அணை பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்திருக்கிறார்கள். இந்த அணை பாதுகாப்பு சட்டத்தினால், தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற விவரத்தை மத்திய அரசிற்கு எடுத்துரைத்திருக்கின்றார்கள்.
கேள்வி : மேகதாது அணை கட்டுவது குறித்து ...
பதில் : ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை கொடுத்திருக்கிறது. எந்த ஒரு அணை கட்டவேண்டுமானாலும், அந்த மாநிலத்திற்கு கீழ் உள்ள மாநிலத்தின் இசைவு பெறாமல் எந்தவித கட்டுமானப் பணியையும் மேற்கொள்ள முடியாது. ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்புஅளித்தபடிதான் அனைத்து மாநிலங்களும் நடந்து கொள்ள வேண்டுமென்று இந்தத் தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி : தண்ணீர் பிரச்சினையில் அனைத்து மாநிலங்களும் நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறார்களே?
பதில் : இன்றைக்கு மட்டுமல்ல, 50 ஆண்டுகாலமாக வஞ்சித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். நாம் சட்டப் போராட்டம் நடத்திதான் தீர்ப்பை பெறவேண்டும் என்ற சூழ்நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.
கேள்வி : ஸ்டாலின் தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டு வைத்துக் கொண்டிருக்கிறார், 700 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்தது என்றும், அவர் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாகவும் தகவல் வெளியிட்டிருக்கிறாரே?
பதில் : போய்ட்டு போகிறார். நடந்திருந்தால் தானே போக முடியும். ஏற்கனவே, காலையிலிருந்து மாலை வரை பல்வேறு பொதுக் கூட்டங்களில் பேசினேன். முதலில், இந்த ஆட்சி கவிழும், கட்சி உடையும் என்று பார்த்தார்கள், ஒன்றும் நடக்கவில்லை. ஊழல் செய்திருக்கிறார்கள், அதனால் நீதிமன்றத்திற்கு போகிறோம் என்று இன்றைக்கு புதிய ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே, என் மீது வழக்க போட்டார்கள், உச்சநீதிமன்றத்தில் தடையாகி போய்விட்டது. வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த ஆட்சி மீது குற்றம் சுமத்துவதற்காக பொய் பிரச்சாரத்தை இப்பொழுது முடுக்கி விட்டிருக்கிறார்கள், ஒன்றும் எடுபடாது. அரசைப் பொறுத்தவரை, ஒப்பந்தப்புள்ளி திறந்தவெளி ஒப்பந்தம், யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம், தகுதியானவர்களுக்குத்தான் ஒப்பந்தம் கிடைக்கும்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எப்படி டெண்டர் விட்டார்களோ அதே முறைதான் பின்பற்றப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபொழுது, எந்த அடிப்படையில் ஒப்பந்தம் விட்டாரோ, அதே அடிப்படையில்தான் இப்பொழுதும் ஒப்பந்தம் விடுகிறார்கள். இதில் எப்படி முறைகேடு நடக்கும்? முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை. வேண்டுமென்றே இந்த ஆட்சி மீது பழி சுமத்த வேண்டும், குற்றம் சுமத்த வேண்டும், பொய் பிரச்சாரத்தை மக்களிடத்தில் பரப்ப வேண்டும், இன்றைக்கு நாளுக்கு நாள் அரசுக்கு நற்பெயர் வந்து கொண்டிருக்கின்றது, அதற்கு களங்கம் கற்பிக்கின்ற விதத்தில் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிறார்.
கேள்வி : அதிமுக ஒரு மூழ்கும் கப்பல் என்று செந்தில் பாலாஜி சொல்லியிருக்கிறாரே?
பதில் : வேடிக்கையாக இருக்கிறது. அவர் 1996-ல் திமுக-வில் இருந்தவர், கவுன்சிலருக்கு போட்டியிட்டவர், அப்பொழுது அந்த எண்ணம்தான் இருக்கும். இதுவரையில், அதிமுக-வில் இருந்து பலனை அனுபவித்தார், அதிமுக-வினால் தான் நாட்டிற்கு இந்த பாலாஜி யார் என இவர் அடையாளம் காட்டப்பட்டார். இந்தக் கட்சியில் இருந்ததால்தான், அவருக்கு சீட் கிடைத்து, எம்.எல்.ஏ ஆகி போக்குவரத்துத் துறை அமைச்சராக உயர்ந்த பொறுப்புக்கு வந்தார். நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதன்றே மறப்பது நன்று என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பொருத்தமாக பாலாஜிக்கு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.