எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, தி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
குற்றச்சாட்டுகள்...
கரூரை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான மந்திரி சபையில் கடந்த 2011-ம் ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து அவரை ஜெயலலிதா மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார். அவருக்குப் பதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள்...
ஜெயலலிதா மீண்டும் முதல்வரான போதும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. காரணம், போக்குவரத்து துறை அமைச்சராக இவர் இருந்த போது பல இளைஞர்களுக்கு கண்டக்டர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தன.
தி.மு.க.வில் இணைத்து...
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு செந்தில் பாலாஜி டிடிவி தினகரன் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். தினகரனின் அ.ம.மு.க. இயக்கத்தின் அமைப்பு செயலாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களுடன் செந்தில் பாலாஜியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது தொடர்பாக தினகரனுக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதனால் அதிருப்தியில் இருந்த செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி தி.மு.க.வில் இணைவது என்று முடிவெடுத்தார். இது தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதை நேற்று ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார் செந்தில் பாலாஜி. தனது ஆதரவாளர்கள் படை சூழ அறிவாலயம் சென்ற அவர் அங்கு ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்கான உறுப்பினர் புத்தகத்திலும் அவர் கையெழுத்திட்டார்.
மாபெரும் துரோகம்...
அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர், அமைச்சர் என பல்வேறு பதவிகளில் இருந்து பதவி சுகம் அனுபவித்தவர்தான் இந்த செந்தில் பாலாஜி. அப்படிப்பட்ட இவர் இன்றைக்கு தி.மு.க.வுக்கு தாவியிருக்கிறார். தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை தோற்றுவித்தார் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் பணியாற்றி தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவும் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில் கருணாநிதி ஒரு தீய சக்தி என்றும் ஜெயலலிதா விமர்சித்தார். அவரது தலைமையில் பணியாற்றி அமைச்சர் பதவி உள்ளிட்ட பதவிகளில் இருந்து சுகபோகங்களை அனுபவித்த செந்தில் பாலாஜி இன்று தி.மு.க.வுக்கு தாவியிருப்பது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்று அ.தி.மு.க.வினர் கொதித்துப் போயுள்ளனர். இது ஒருபுறமிருக்க, செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த தி.மு.க. இன்று இவரை எப்படி தனது இயக்கத்தில் சேர்த்துக் கொண்டது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மாற்றுக் கட்சியில் இருந்தால் மோசடி பேர்வழி. தி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த கேள்விக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.
கவலையில்லையாம்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அ.ம.மு.க. இயக்கத்தின் மாநில அமைப்பு செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்தவர். இப்போது அந்த இயக்கத்துக்கும் டாடா காட்டி விட்டு இவர் தி.மு.க.வுக்கு சென்று விட்டார். இது பற்றி கருத்து கூறிய டிடிவி தினகரன், நெல் மணிகளோடு களைகளும் வளர்வது நிலத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்தான் என்று ஆத்திரத்தோடு கூறியுள்ளார். மேலும் போலிகள் போவதை பற்றி கவலையில்லை. போனால் போகட்டும் போடா என்கிற பாணியில் தினகரன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்ததை பற்றி பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
பாதை தவறி விட்டார்...
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இது பற்றி கூறுகையில், செந்தில் பாலாஜி பாதை தவறி விட்டார் என்று கூறியுள்ளார். அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், கடலில் கரைத்த பெருங்காயம் போல பழைய பாசத்தின் அடிப்படையிலேயே அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். பிரிந்து சென்றவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தால் எதிர்காலம் இருக்கும். தினகரன் கட்சியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். பலம் இல்லாதவர்கள் தான் மற்றவர்களை தங்கள் பக்கம் இழுப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். எது எப்படியோ, மாற்றுக்கட்சியினரை விமர்சிக்கும் தி.மு.க. தங்கள் பக்கம் அவர்கள் வந்தால் பொன்னாடை போர்த்தி வரவேற்கிறது. இதில் என்ன லாஜிக் உள்ளது என்று தெரியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.