முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1,258 கோடி மதிப்பில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - விரைவில் நிதி ஒதுக்கப்படும் - நிர்மலா சீதாராமன் தகவல்

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : ரூ.1,258 கோடி மதிப்பில் மதுரை அருகே தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது. தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது  என்பது குழப்பமாக இருந்து வந்தது. அதை உறுதிபடுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 20-ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக தகவல் வெளியானது.

அமைச்சரவை ஒப்புதல்

இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன். ராதாகிருஷ்ணன்....

இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் டிவீட் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது., மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ள சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு நன்றி. இது கொண்டாடுவதற்கான தினம் என்று கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்...

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது.,  மதுரை அருகே தோப்பூரில் ரூ.1258 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமைக்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஒப்புதலை தொடர்ந்து விரைவில் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து