முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் குழந்தைகளை கொன்ற தாய்க்கு 40 வருட சிறை

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

குழந்தைகளை கொன்ற தாய்க்கு 40 வருட சிறை
டெக்சாஸ், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெற்ற குழந்தைகளை காரிலேயே விட்டு விட்டு பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக தாய் சென்றதால் குழந்தைகள் இருவரும் இறந்து விட்டனர். இதையடுத்து அந்த பெண்ணுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் அமாந்தா ஹாக்கின்ஸ். இவருக்கு பிரைன் ஹாக்கின்ஸ், ஆடிசன் ஓவர்கார்ட் எடி ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். கடந்த ஆண்டு மலைப்பாங்கான இடத்தில் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ள குழந்தைகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்தில் இரு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து பதறிய அமாந்தா, அவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது மருத்துவர்கள் கேட்டபோது ஏரியில் அருகே உள்ள செடியை முகர்ந்ததால் அவர்கள் இருவரும் மயக்கமடைந்ததாக கூறியுள்ளார். அமாந்தாவின் விளக்கத்தால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் நேராக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணை நடத்திய போலீசாரிடம் அமாந்தா குழந்தைகள் தனது செயல்பாடுகளால்தான் இறந்தது என்பதை ஒப்புக் கொண்டனர்.

விசாரணையில் இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு அமாந்தா பார்ட்டிக்கு சென்றுள்ளார். அப்போது இரு குழந்தைகளும் சும்மா அழுது கொண்டே இருந்ததால் பார்ட்டியில் கலந்து கொள்வது தடைப்பட்டு விடுமோ என எண்ணி குழந்தைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு காரில் போட்டு பூட்டியுள்ளார். சுமார் 15 முதல் 18 மணி நேரம் வரை அந்த காரிலேயே குழந்தைகள் இருந்தனர். அப்போது இருவரது அழுகுரல் கேட்டு பார்ட்டிக்கு வந்த சிலர் குழந்தைகளை அழைத்து வருமாறு கூறினர். அதற்கு அமாந்தாவோ வேண்டாம். அவர்கள் தூங்குவதற்கு அப்படிதான் அழுவார்கள் என கூறி விட்டார்.

இதையடுத்து பார்ட்டியில் குடித்து விட்டு அங்கேயே அமாந்தா  இருந்துள்ளார். பின்னர் அடுத்த நாள் மதியம் எழுந்து குழந்தைகளை காணாது தேடியுள்ளார். இதையடுத்து காரில் விட்ட ஞாபகம் வந்து விடவே போய் காரில் பார்த்து விட்டு அவர்கள் மயக்க நிலையில் இருப்பதாக கூறி மருத்துவமனையில் பொய்யான தகவலை அளித்துள்ளார். இதையடுத்து அமாந்தா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள் , அமாந்தாவுக்கு தலா 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து