முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ பயன்பாட்டுக்காக அதிநவீன ஜிசாட்-7ஏ. செயற்கைக் கோள் இன்று விண்ணில் பாய்கிறது

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீஹரிகோட்டா, இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட ராணுவப் பயன்பாட்டுக்கான அதிநவீன ஜிசாட் - 7ஏ செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட் இன்று மாலை ஏவப்பட உள்ளது. அதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. ஜிசாட் - 7ஏ செயற்கைக் கோளின் மொத்த எடை 2 ஆயிரத்து 250 கிலோ ஆகும்.. ஜிசாட் 7ஏ செயற்கைக் கோளானது இந்தியாவின் 35-வது தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும். விமானப் படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைக் கோள் மூலம் பெற முடியும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இறுதி கட்டபணியான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து