முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் தலைமையில் சிறுபான்மையினர் தின விழா

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

 தேனி,-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் தின விழா  இன்று  (18.12.2018)  மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலா ரூ.3,386-வீதம் 5 பயனாளிகளுக்கு ரூ.16,930- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை  மாவட்ட ஆட்சித்தலைவர்   வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:-
 தமிழக அரசு சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. திட்டங்களின் பயன்களை சிறுபான்மையினர் முறையாக பெற்றுக் கொள்வதற்கும், முறையாக அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்களை பெறுவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகின்றது. சிறுபான்மையின வகுப்பினைச் சேர்ந்தவர்கள் தங்களது வழிபாட்டு நேரங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுமக்களிடம் அரசினால் செயல்படுத்தப்படும் திட்டங்களை எடுத்துக்கூறி அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், அதன்மூலம் அவர்கள் ஏதேனும் ஒரு தொழில் புரிந்து நிலையான வருவாயை பெற்றிட வழிவகை செய்திட வேண்டும்.
 சிறுபான்மையினர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவினை ஏற்படுத்தி, குழுவின் மூலம் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவர்களைக் கண்டறிந்து அவர்களது வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் அடைய அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு வழிகாட்டிட வேண்டும். சிறுபான்மையின மக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிவித்து அதன் வழியாக தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,   தெரிவித்தார்.
 இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி,  உட்பட சிறுபான்மையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து