முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உரிமையாளரின் சூதாட்ட மோகத்தால் திவாலான ஸ்மார்ட்போன் நிறுவனம்

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2018      வர்த்தகம்
Image Unavailable

பிஜிங், பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ஜியோனி, உரிமையாளரின் சூதாட்ட மோகத்தால் திவாலாகி உள்ளது.

சீனாவின் பிரபல மொபைல் நிறுவனம் ஜியோனி. குறைந்த விலை உட்பட ஏராளமான ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து, ஆசிய சந்தைகளில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக திகழ்ந்தது. சில ஆண்டுகளாக இந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகி உள்ளது. ஆகஸ்ட் 2018 வரை அந்நிறுவனத்திற்கு 20.2 பில்லியன் யுவான் கடன் இருப்பதாக சீன பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜியோனி நிறுவனத்தின் நிறுவனர் லியூ லிராங் கூறுகையில், ஜியோனி நிறுவனம், 2013-15ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 14.4 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தாக தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் ஸ்பெயின் சென்றிருந்த லியூ, அங்கு சூதாட்டத்தில் மட்டும் 10 பில்லியன் யுவானை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் சப்ளையர்களுக்கு தர வேண்டிய தொகை கொடுக்காமல் அப்படியே நின்று போய் விட்டது. கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு ஜியோனி நிறுவனத்தை முறையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜியோனி நிறுவனம் திவாலானதாக அறிவிக்க கோரி அங்குள்ள ஷென்ஷென் கோர்ட்டில் முறையிடப்பட்டது. கோர்ட்டும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஜியோனி நிறுவனம், இந்தியாவில் ரூ. 650 கோடி முதலீடு செய்ய இருப்பதாக இந்தாண்டில் செய்திகள் வெளியாகின. அப்படியான சூழலில், அந்நிறுவனம் திவாலாவது இந்திய சந்தைகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து