முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தொகுதியில் புதிய கால்நடை மருத்துவமனைகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்:

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிலுள்ள மேலஉரப்பனூர் மற்றும் அரசபட்டி கிராமங்களில் தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிய கால்நடை மருத்துவமனைகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்
தமிழகம் முழுவதிலும் உள்ள கிளை கால்நடை மருத்துவமனைகள் அனைத்தும் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்திடவும் புதிதாக கிளை கால்நடை மருத்துவமனைகள் அமைத்திடவும் தமிழக முதல்வர் எடப்பாடியார் உத்தரவிட்டிருந்தார்.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிலுள்ள மேலஉரப்பனூர்,கள்ளிக்குடி தாலுகாவிலுள்ள டி.அரசபட்டி ஆகிய கிராமங்களில்  நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டது.இங்கு கால்நடை மருத்துவர்,மருத்துவ உதவியாளர் மற்றும் மருத்துவ பணியாளர்களைக் கொண்டு கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருத்து சிகிச்சைகளும் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிடும்வகையில்  மேலஉரப்பனூர்,டி.அரசபட்டி கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிய கிளை கால்நடை மருத்துவமனைகளின் துவக்க விழா நேற்று வெகு சிறப்பாகநடைபெற்றது.இவ்விழாவிற்கு மதுரை கலெக்டர் நடராஜன்தலைமை வகித்தார்.உசிலை கோட்டாட்சியர் முன்னிலை வகித்தார்.கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் திருவள்ளுவன் வரவேற்றார்.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து கால்நடை மருத்துவமனைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.பின்னர் விழாவிற்கு வந்திருந்த பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம்,கால்நடை உதவி மருத்துவர்கரிகாலன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,ராம்சாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுகுமார்,சுமதி சாமிநாதன்,அவைத் தலைவர் அன்னக்கொடி,முன்னாள்ஒன்றிய கவுன்சிலர்கள் பழனிச்சாமி,சிவஜோதி தர்மர்,சீதாஆறுமுகம்,கட்சி நிர்வாகிகள் சாமிநாதன்,கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்,கள்ளிக்குடி ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் அரசபட்டி மாரிசாமி,முருகன்,சின்னஇருளப்பன், ரவி,கந்தசாமி,வில்லூர் சரவணன்,கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து