முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்பின் கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: அமெரிக்காவில் அனைத்து துறைகளும் முடங்கும் அபாயம்

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதி மசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் ஷட்டவுன் தொடங்குகிறது.

இதனால், அரசின் செலவினங்களுக்கு நிதி இல்லாமல் நாட்டில் அனைத்துத் துறைகளும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 8 லட்சம் ஊழியர்கள் வேலைக்கு வர மாட்டார்கள். அல்லது ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டியது இருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஷட்டவுன் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஷட் டவுன் நிகழ்வு என்பது, அமெரிக்க மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட சேவைகள் அனைத்துக்கும் ஊதியம் அளிக்க பணம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்படும். அத்தியாவசிய பணிகளாக போலீஸ், ராணுவம் தவிர அனைத்தும் முடங்கும்.

அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக ஷட்டவுன் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்ப 500 கோடி டாலர் நிதி கேட்டு அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், நிதி செலவினத்துக்கான மசோதாவை நிறைவேற்றாமல் செனட் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம், குடியரசுக் கட்சிகள் அதிகம் கொண்ட பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

இதற்கிடையே வெள்ளை மாளிகையில் ஜனநாயாகக் கட்சியின் எம்.பி.க்களும், குடியரசுக் கட்சியின் எம்.பி.க்களும் பேச்சு நடத்தியதில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.  ஒருவேளை இந்த ஷட் டவுன் தொடங்கினால் எத்தனை நாட்கள் அமெரிக்காவில் நீடிக்கும் என்று தெளிவாகத் தெரியாது. ஆனால், 8 லட்சம் ஊழியர்கள் வேறு வழியின்றி ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் கிறிஸ்துமஸ் நேரத்தில் ஏற்படும். கடந்த 3 காலாண்டுகளாக ராணுவம், சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு 2019-ம் ஆண்டு செப்டம்பர் வரை முழுமையாக நிதி ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், 25 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்காமல் இருக்கிறது.

இந்த ஷட்டவுன் நடவடிக்கையால், நாசா ஊழியர்கள், வர்த்தக துறை அதிகாரிகள், உள்துறை, நீதித்துறை, வேளாண்மை மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அதேசமயம், நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள் அனைத்தும் திறந்திருக்கும். ஆனால், ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரமாட்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து