முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் விருதுநகரில் அ.ம.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க வில் இணைந்தனர்

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி  - விருதுநகர் நகர் ஒன்றியத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் விருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இளைஞர் பாசறை துணைத்தலைவர் காளீஸ்வரன், விருதுநகர் நகர இளைஞரணி தலைவர் ஆதவன், தகவல் தொழில்நுட்ப தலைவர் அரவிந்தன், நகர வர்த்தக அணி செயலாளர் ராமநாதன் மற்றும் 29 வார்டு செயலாளர் மதனகோபால் இரண்டாவது வட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் நாலாவது வார்டு பொறுப்பாளர் செல்வம் உட்பட 19 வார்டு22 வார்டு 20-வார்டு உட்பட விருதுநகரைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக கழகத்தினர் அக்கட்சியிலிருந்து விலகி மாவட்ட கழக செயலாளர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் நிகழ்ச்சியில் அதிமுக விருதுநகர் நகர செயலாளர் நைய்னார்முகமது, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச் செயலாளர் தர்மலிங்கம், நகர அம்மா பேரவை செயலாளர் நாகசுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கே.கே. கண்னன், நகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் டிபிஎஸ் வெங்கடேஷ் சிவகாசி ஒன்றிய ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி, நகர செயலாளர் அசன் பதூரூதின், வெம்பக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் மணிகண்டன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் பாண்டியராஜன், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் தனுஷ் உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். அதிமுகவில் இனைந்த அமமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து