முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தத்தில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள புனிதராயப்பர், இம்மானுவேல் தேவாலயங்களில்  கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இயேசு பிறப்பு குடில் அமைக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசுவின் பிறப்பை பங்குத் தந்தையர்கள் சேர்ந்து கூட்டு திருப்பலி நடத்தினர். கிறிஸ்துமஸ் பாடல்களை இசைக்கருவிகளில் வாசித்து பாடல்களை பாடினார்கள். இதில் நத்தம்,ஆவிச்சிபட்டி, ஊராளிபட்டி,பங்கிற் குட்பட்ட கிறிஸ்துவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த இளைஞர்கள் இறை மக்களுக்கு ஒருவருக்கொருவர்  வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதைப் போலவே செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து