முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

புதன்கிழமை, 26 டிசம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - நிலக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் ஆகிய இடங்களில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் யாகப்பன், பேரூர் செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர்  வரவேற்றார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூத் கமிட்டி முகவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நிலக்கோட்டை தொகுதியும் காலியாகியுள்ளது. கட்சியும், ஆட்சியும் மறைந்த முதல் அமைச்சர்  ஜெயலலிதா கூறியது போல் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். யாராலும் தடுக்க முடியாது. நிலக்கோட்டை தொகுதி எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. கொடைக்கால் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஆவின் தலைவர் திவான்பாட்ஷா, வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், வத்தலக்குண்டு நகர செயாளர் பீர்முகமது, வத்தலக்குண்டு கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரத்தினம்,  ஊராட்சி கழக செயலாளர்கள்,சேசுராஜ், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து