முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் பகவதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளை அதிமுகவினர் துவக்கினர்

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

தேனி- தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான மண்டல பொறுப்பாளர்களுக்கான  ஆலோசனை கூட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்;செல்வம் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜா, நகர செயலாளர் என்.வி.ராதா ஆகியோர் தலைமையில், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர், நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி அன்பு, மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜவேல், வழக்கறிஞர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட  மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், மார்க்கையன்கோட்டை பேரூர் கழக செயலாளர் அகிலன் உள்ளிட்ட போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட சின்னமனூர் ஒன்றிய நிர்வாகிகள் பெரியகுளம் பகவதியம்மன் கோவிலில் ஒவ்வொரு வார்டுக்கும் பூத் கமிட்டியினர் விபரங்கள் அடங்கிய புத்தகங்களை வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மண்டல நிர்வாகிகள் 4 குழுக்களாக பிரிந்து  வார்டுகளுக்கு சென்று பூத் கமிட்டியினர் அந்தந்த பூத்துக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ளனரா என்பது உள்ளிட்ட பணிகளை துவக்கினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து