முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: இந்திய அணிக்கு சச்சின் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற அபார வெற்றிக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மெல்போர்னில் நடந்த பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் இந்த வெற்றி வசமானது.

இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள், முன்னாள் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலிய வீரர்கள் சமூக ஊடகங்கள் வழியாகப் பாராட்டி வருகின்றனர். இதில் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் அபார வெற்றியையும், பும்ராவின் வேகப்பந்து வீச்சையும் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,  மெல்போர்னில் இந்திய அணி வியத்தகு முயற்சியால் சிறப்பான வெற்றியைப் பெற்று 2-1 என்று டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் பும்ராவின் பந்துவீச்சு செழுமை அடைந்து, கூர்மை பெற்று, வலுவடைந்து வருகிறது. உலகிலேயே மிகச் சிறந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது என்று உறுதியாகக் கூறுவேன் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து