முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார தடைகளை தொடர்ந்தால் வேறு வழியை நாட வேண்டியதிருக்கும் அமெரிக்காவிற்கு வட கொரியா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 1 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பியாங்கியாங், அமெரிக்காவின் பொருளாதார தடை தொடர்ந்தால், எங்களது இறையாண்மையை காக்க வேறு வழிகளை நாட வேண்டியிருக்கும் என வட கொரியா எச்சரித்துள்ளது.

சர்வதேச தடையை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்து வந்தது. இதனையடுத்து அந்நாடு மீது ஐ.நா. அமெரிக்கா பொருளாதார தடை விதித்தன. இருந்தாலும், வட கொரியா தனது நடவடிக்கையை மாற்றவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் சந்தித்து பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை கைவிட வடகொரியா ஒப்பு கொண்டது. இதனை வரவேற்ற அமெரிக்கா, அணு ஆயுதங்களை முற்றிலும் அழித்தால் மட்டுமே பொருளாதார தடை விலக்கப்படும் என கூறியிருந்தது.

இந்நிலையில், வட கொரிய தலைவர் கிம்ஜாங் உன் கூறியதாவது: உலக நாடுகள் முன்னர் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றா விட்டால், எங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை மற்றும் அழுத்தங்கள் அகற்றவிட்டால், எங்களது இறையாண்மை மற்றும் நலனை பாதுகாக்க வேறு வழிகளை நாட வேண்டியதை தவிர வேறு வழியில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளேன். அப்போது, சர்வதேச சமூகம் வரவேற்கும் முடிவை எடுக்கப்படும். தென் கொரியா - அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து