முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து ஏன் ? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பதற்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர் அசோக் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

தேர்தல் அட்டவணை...

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

கருணாநிதி மரணம் அடைந்ததன் காரணமாக 7 -8 -2018 முதல் திருவாரூர் சட்டசபை தொகுதி காலி இடமாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி காலியாக உள்ள தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் அதாவது 6-2-2019 க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல்  ஆணையம் ஜனவரி 3 -ம் தேதி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. 28 -ம் தேதி ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு ஏற்ப தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.

தலைமைச் செயலாளர்...

முன்னதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடந்த 3 -12 -2018 அன்று தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.அதில் அவர் கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடும் பேரழிவு ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். விவசாய பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் அழிந்ததோடு 6 லட்சம் வீடுகள், 1.5 லட்சம் மின் கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

3 மாதங்கள் ஆகும்...

கஜா புயல் பாதித்த 12 மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று என்றும், அங்கு நிவாரணப்பணிகள் முடிந்து முழுமையான இயல்பு நிலை திரும்ப 3 மாதங்கள் ஆகும் என்றும் கூறி இருந்தார். எனவே திருவாரூர் தொகுதிக்கு 2019 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டு இருந்தார். மேலும் தலைமைச்செயலாளர் தனது கடிதத்தில் காலி இடமாக உள்ள  18 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

5 மாவட்டங்களில்...

தமிழக அரசு தலைமை செயலாளரின் இந்த கடிதத்தை மத்திய உள்துறைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி கருத்து கேட்டது. அதை ஏற்று கடந்த 31 - 12 -2018 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்து இருந்தது. அதில் தமிழ்நாட்டில் நவம்பர் 15 -ம் தேதி தாக்கிய கஜாபுயலில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் மாநில அரசு மூலம் நிவாரணப்பணிகள் நடந்து வருகிறது என்று கூறப்பட்டு இருந்தது.

நிவாரணப்பணிகளில்...

இந்த நிலையில் கடந்த 2 - 1- 2019 அன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு இ-மெயில் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மறுநாள் 3 -1-2019 அன்று அவர் தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார். மேலும் கஜா புயல் தாக்குதல் காரணமாக மாநில அரசு மற்றும் அதிகாரிகள் அனைவரும் நிவாரணப்பணிகளில் தீவிரமாக உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தற்காலிகமாக மற்றொரு மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். இது பற்றி தலைமை தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்ட போது சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்று கூறி இருந்தார்.

கட்சிகள் கோரிக்கை...

இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருவாரூரில் தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திருவாரூரில் கடந்த 5-1 - 2019 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்து கேட்டார். அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.  கஜா புயல் நிவாரணப்பணிகள் நடந்து வருவதால் இடைத்தேர்தலை ஒத்தி வைக்கவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இடைத்தேர்தல் ரத்து...

அதனை திருவாரூர் கலெக்டர் கடந்த 6 - 1-2019 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். இதற்கு பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமான அறிக்கை ஒன்றை  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். இதை கருத்தில் கொண்டு தற்போது திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை சுமூகமாக நடத்த முடியாது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது. எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 - பிரிவு 150,30,56 மற்றும் அரசியல் சட்டப்பிரிவு 326, பொது காரணங்கள் சட்டப்பிரிவு 21 ஆகியவற்றின் அடிப்படையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இதன் விளைவாக திருவாரூர் தொகுதி மாவட்ட தேர்தல் அதிகாரி இதுவரை மேற்கொண்டு இருந்த தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும், நடவடிக்கைகளும் செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது.

உகந்த சூழ்நிலைக்கு பிறகு...

தமிழக அரசின் கடிதம் மற்றும் கட்சிகளின் கருத்து ஆகிய அடிப்படையில் திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து ஆகிறது. திருவாரூர் தொகுதியில் சுமூகமாக, நியாயமாக, அமைதியாக தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உருவான பிறகு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையர்களின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து