முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது வரும் 17-ம் தேதி வழங்கப்படுகிறது

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் பற்றிய சிறப்புகளை பரப்பும் கலைஞர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் அரிவராசனம் விருதை இந்த ஆண்டு பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா பெறுகிறார்.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வருகிற 14-ம் தேதி மாலை மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதற்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜை காலத்தில் கேரள அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பன் பற்றிய சிறப்புகளை பரப்பும் கலைஞர்களை கவுரவப்படுத்தும் விதத்தில் அரிவராசனம் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு வழங்கப்படுகிறது. வருகிற 17-ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது பெறும் கலைஞருக்கு ரூ. ஒரு லட்சம் பரிசும் கிடைக்கும். இந்த தகவலை கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.  இதற்கு முன்பு அரிவராசனம் விருதை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் கங்கை அமரன் போன்றோர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து