முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: அரோரா உறுதி

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : பாராளுமன்ற தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் உறுதிபட தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் - மே மாதங்களில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. இந்த தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறியுள்ளார்.

சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு நிறுவனத்தின் புதிய கல்வியாண்டு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மோசடி செய்ய முடியாதது. அவற்றின் செயல்பாடுகளை நிபுணர் குழு ஆய்வு செய்து உறுதியளித்து இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு முறையின் நேர்மையில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று உறுதிபட தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து