முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி அமைப்புகளின் தனிஅதிகாரிகள் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு - சட்டசபையில் மசோதா ஏகமனதாக நிறைவேறியது

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள் நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன.

விசாரணையில் வழக்குகள்...

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்திற்கு பின்னர் பல்வேறு பிரச்னைகள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி அமைப்புகளின் தொகுதி எல்லைகளை வரையறை செய்வது தொடர்பான ஆணைகளுக்கு எதிரான வழக்குகள் இன்றளவும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் உள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் தேர்தல்களை நடத்திட ஏதுவாக உள்ளாட்சிமன்றங்களின் வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதற்காக அரசு 2017-ம் ஆண்டு வரையறை ஆணையத்தை உருவாக்கியது. வார்டுகள் வரையறைகளை அண்மையில் அரசுக்கு பரிந்துரையை தாக்கல் செய்துள்ளது.

பதவி காலத்தை...

இதைத்தொடர்ந்து பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த பரிந்துரையை சமர்பிக்க வேண்டும். இதன் பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். இதன்காரணமாக பேரூராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் தேர்தல்களை நடத்த இயலவில்லை. இந்த நிலையில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம், கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை வரும் ஜூன் 30-ம் தேதி வரை மேலும் ஆறுமாதங்களுக்கு அல்லது சாதாரண தேர்தல்களுக்கு பின்பு மன்றத்தின் முதல் கூட்டம் வரை நீட்டிக்க வகை செய்யும் பேருராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தொடர்பான சட்டத்திருத்தம் செய்ய அரசு முடிவெடுத்திருந்தது.

10 சட்டத்திருத்தங்கள்...

மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் என்று இரண்டு சட்டத்திருத்தங்களை சட்டசபையில் தாக்கல் செய்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்தார். இதற்கு திமுக , காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அறிமுகநிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அந்த சட்டத்திருத்தம் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்ட போது அக்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் விவாதிக்கப் படவில்லை. இந்த கூட்டத்தொடரின் போது 10 சட்டத்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து