முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் பொறுப்பேற்றார் அலோக் வர்மா

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அலோக் வர்மா டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததையடுத்து ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் கூறி வந்தனர். இதையடுத்து இருவரையும் கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது. மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். ஊழல் விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையடுத்து அலோக் வர்மா நேற்று காலை டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி காலம் வருகிற 31-ம்தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து