முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டு யானை தாக்கி உயிரிழந்த வனக்காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த வனக்காவலர் மாரப்பனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வனத்துறை மூலம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கோட்டூர் தரப்பு, கண்டகானப்பள்ளி கிராமத்தின் அருகே 6.1.2019 அன்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பச்சபனட்டி தரப்பு, கோட்டட்டி கிராமத்தைச் சேர்ந்த வனக்காவலர் மாரப்பன் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, உயிரிழந்த மாரப்பனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வனத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, வீர தீர செயல் மற்றும் அசம்பாவித சூழ்நிலையில் உயிரிழந்தால், அவர்களின் குடும்ப நலன் கருதி, வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை நான்கு லட்சத்திலிருந்து பத்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க   6.10.2017  அன்று ஆணையிட்டிருந்தேன். இந்த ஆணையின் படி, இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாரப்பன் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வனத்துறை மூலம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து