முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து தரப்பினரும் வளர்ச்சி அடையவே 10 சதவீத இடஒதுக்கீடு - பிரதமர் மோடி விளக்கம்

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

சோலாப்பூர் : அனைத்து தரப்பினரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

நிறைவேறியது...

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதி வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.  அந்த மசோதா தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டதோடு அவையும் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தொடர்ந்து பொய்...

வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால் ஒதுக்கீடு மசோதா குறித்து தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. வாய்ப்புகளில் சமத்துவம் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மசோதாவை நிறைவேற்றுவதற்காக ராஜ்யசபா கூடுதலாக ஒருநாள் கூடியிருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய் பேசி வருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து