முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      வர்த்தகம்
Image Unavailable

புது டில்லி : ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் மாநில நிதி அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்திற்கு பின் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. தொகுப்பு சலுகைக்கான ரூ.1.5 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. இது வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சலுகை திட்டத்தின் கீழ் வருபவர்கள், வரியை, காலாண்டிற்கு ஒரு முறை வரி சலுத்த வேண்டும். ஆனால், ஆண்டிற்கு ஒரு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சேவை துறையினருக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. தொகுப்பு சலுகைக்கான பலன்கள், சேவை துறையினருக்கும் கிடைக்கும். ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து