முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாஸ்டிக் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க சென்னை ஐகோர்ட் மீண்டும் மறுத்து விட்டது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1-ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்து, அதற்கான மாற்று பொருட்களை அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க மறுத்து விட்டது. இந்நிலையில், இந்த தடையை எதிர்த்து மீண்டும், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது பொருட்களை பேக்கிங் செய்யும் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது.

இதனை விசாரித்த கோர்ட், பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க மறுத்ததுடன், இந்த தடையை தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் வணிகர்களை துன்புறுத்தக் கூடாது. தடை செய்யாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து