முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாக்குழு அமைக்க கோரிய வழக்கு முடித்து வைப்பு

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை, அலங்காநல்லூரில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஜல்லிக்கட்டு விழாக்குழு அமைக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அலங்காநல்லூரில் ஜனவரி 17-ல் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் நடும் விழா நிறைவடைந்த நிலையில், 12-ல் காளைகளுக்கான பதிவும், 13-ல் மாடுபிடி வீரர்களுக்கான பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் தரப்பில் அவரது வழக்கறிஞர், நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அனைவரையும் இணைத்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள் அதனை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, காலை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் விழாக்குழுவின் எண்ணிக்கை 24-லிருந்து 35 ஆக உயர்த்தப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து