முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரு கோபிந்த் சிங் நினைவு நாணயம் பிரதமர் மோடி வெளியிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சீக்கிய குரு கோபிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக புதிய நாணயத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். 

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் மறைவுக்கு பின்னர் பலர் அம்மதத்தின் குருமார்களாக இருந்து சீக்கியர்களை வழிநடத்தி வந்தனர். அவ்வகையில் 10-வது சீக்கிய குருவான கோபிந்த் சிங் கடந்த 1708-ம் ஆண்டில் மறைந்தார். இவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சீக்கிய குருமார்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து