முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : பெட்ரோல், டீசல் விலை 5-வது நாளாக நேற்றும் உயர்ந்துள்ளது. நேற்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 40 காசுகள் உயர்ந்துள்ளது.

மீண்டும் விலையேற்றம்...

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணைய் விலையை பொறுத்து இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளித்து இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் விலையேறத்துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்ந்துள்ளதால், விலை ஏறி வருவதாக எண்ணய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விலை ஏற்றம்...

நேற்று எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல், நேற்று முன்தினம் விலையில் இருந்து 40 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.72.79 ஆகவும்,  டீசல், நேற்று முன்தினம் விலையில் இருந்து 53 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 67.78 ஆகவும் விற்பனையானது.

உடனடி எதிரோலி...

இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியையே சார்ந்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய சந்தையில் உடனடியாக எதிரொலிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து