எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் பொய் செய்திகள் அனைத்தும் தவிடு பொடியாக்கப்படும் என்றும், உள்ளாட்சி துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்த போது எத்தனை முறை கிராமங்களுக்கு சென்றார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள் எழுப்பி உள்ளார்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சான்றோர்கள் சென்னதைப் போல தை பிறந்திருக்கின்றது, நமக்கு வழி பிறந்திருக்கின்றது. இந்த நன்னாளில் எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோருக்கு மணிமண்டபம், அந்த மணிமண்டபத்திலே அவர்களுடைய வெண்கல முழு உருவச்சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் இந்த விழாவில் மொத்தம் ரூ. 121 கோடியே 55 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் 53 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தும், ரூ. 8 கோடியே 94 இலட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 21 புதிய திட்டப் பணிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
எதிர்க்கட்சியைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் அவரது கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் கிராமம், கிராமமாகச் சென்று மக்களை சந்திப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டு, அந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி, கிராமம், கிராமமாகச் சென்று, மக்களை சந்தித்து, குறைகளை நீக்கிய அரசு அம்மாவினுடைய அரசு. அம்மாவினுடைய ஆணையை ஏற்று நாங்களெல்லாம் ஏற்கனவே கிராமம், கிராமமாக சென்று அந்த கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதையறிந்து, அதை உடனுக்குடன் அம்மாவிடத்திலே தெரிவித்து, அவர்களுடைய குறையை நிறைவேற்றியிருக்கின்றோம். அம்மாவின் மறைவிற்குப் பிறகும், அதையே தொடர்ந்து இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அனைத்து மக்களுடைய அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றுகின்ற அரசு அம்மாவினுடைய அரசு. நீங்கள் கிராமம், கிராமமாக போனாலும் சரி, நடைபயணம் மேற்கொண்டாலும் சரி. அ.தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு தந்திருக்கின்றது. அவர்(ஸ்டாலின்)உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது கிராமப்புற, நகரப்புற மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்கின்ற பொறுப்பு அவருக்கு இருந்தது. அப்பொழுது, எத்தனை கிராமத்திற்கு நீங்கள்(ஸ்டாலின்) சென்றீர்கள்? எத்தனை மக்களை பார்த்தீர்கள்? எத்தனை மக்களுக்கு என்னென்ன திட்டங்களை கொடுத்தீர்கள்? எதையும் செய்யவில்லை, இதெல்லாம் போலி விளம்பரம். இவர் ஆட்சியில், பதவியில் இருந்த பொழுது, எனக்குத் தெரிந்த அளவில் இவர் கிராமத்திற்கு சென்றது போல் தெரியவில்லை. மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் எத்தனை கிராமங்களுக்கு வந்திருக்கிறார்? ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுதே மக்களை பார்க்கவில்லை, இப்பொழுது எதிர்க்கட்சியாகி மூன்று வருடங்கள் ஆகிறது. எங்கு போய் மக்களை பார்த்தீர்கள்? இப்பொழுது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக, இவர்கள் கிராம சபை கூட்டம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களை எந்த அரசியல் தலைவராலும் ஏமாற்ற முடியாது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். மக்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். கட்சியை துவக்கியதற்கு காரணமே கிராமத்திலே இருந்து நகரம் வரை ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சேரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அ.தி.மு.க. மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கின்றோம். இருபெரும் தலைவர்கள் ஏராளமான திட்டங்களை வாரி வழங்கியிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் எதுவும் கிடைக்கவில்லை என்று தவறான குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவத் துறையிலே எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கிறது. இரண்டு கையும் இல்லாத ஒருவருக்கு இறந்தவரது கைகளை எடுத்து பொருத்தி, அரசு மருத்துவமனை ஒரு சாதனை படைத்திருக்கிறது.
கால்நடைகள் வளர்ப்பு சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக ஆங்காங்கே கால்நடை மருந்தகங்களை அம்மா அரசு செய்து கொடுத்திருக்கிறது. ஏழை, எளிய தாய்மார்கள் கோழி வளர்க்க வேண்டும் என்பதற்காக கோழி கொடுக்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு அம்மாவின் அரசுதான் சாதனைகளை செய்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம், வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான, பொய்யான செய்தியை இன்றைக்கு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனையையும், உங்களுடைய(தமிழக மக்களின்) மகத்தான ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காங்கிரசுக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை: என் இறுதி ஊர்வலத்துக்கு வாருங்கள்: கார்கே உருக்கம்
25 Apr 2024பெங்களுரு, காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை, எனது இறுதி ஊர்வலத்துக்காவது வாருங்கள் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்ச
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n