முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகரிக்கும்

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும். இதனால் குளிர் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வாரமாக மிக அதிக அளவில் குளிரான வானிலை நிலவி வருகிறது. சில இடங்களில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸை விட குறைவாக உள்ளது. இது தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருக்கிறது. சென்னையில் கடந்த வாரம் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து இருந்தது. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மிக மோசமாக வெப்பநிலை குறைந்து இருந்தது. ஊட்டி, கொடைக்கானலில் 0 டிகிரி செல்சியஸை தொட்டது. அதிகாலையில் மிக அதிக அளவில் குளிர் நிலவி வந்தது. இந்த குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பொங்கல் வரை இந்த குளிர் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குளிர் இன்னும் குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை 10 டிகிரிக்கு குறைவாக செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து