முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் கோலாகல கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் கோலாகலமாகக் கொண்டாடினர்.
மறைந்தும் மறையாமல் மண்ணின் மாணிக்கமாக விளங்கும் தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனருமான புரட்சித்தலைவரின் 102வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல்லில் அ.தி.மு.க. சார்பில் மணிக்கூண்டு பகுதியில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக வந்து பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
செட்டிநாயக்கன்பட்டி கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், அம்மா பேரவை செயலாளர் வி.டி.ராஜன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்சா, முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் சேசு, மோகன், சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. பிரேம்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் யானைத்தெப்பம் பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் தட்டு வண்டி சங்கத்தின் பெயர்ப்பலகையை நத்தம் தொகுதி முன்னாள் செயலாளரும், மாநில பேரவை இணை செயலாளருமான கண்ணன் திறந்து வைத்து, எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி யூசுப் அன்சாரி தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் திருமாறன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து