எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சட்டமன்றத்திற்கு தேர்தல் வரவேண்டும் என்ற ஸ்டாலின் ஆசை நிறைவேறாது என்றும், தி.மு.க. எம்.எல்.ஏக்களே தேர்தல் வருவதை விரும்பவில்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகிழ்ச்சி அடைந்திருப்பார்
எம்.ஜி.ஆரின் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா. சென்னையில் மிகப்பெரிய நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு வளைவு அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையில் 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த அரசு எம்.ஜி.ஆரின் புகழை போற்றுக்கின்ற அரசு. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக மன மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று தெரிவித்தார்.
எந்த மாற்றமும் இல்லை...
தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார் 2021-ம் ஆண்டில் தான் சட்டமன்ற தேர்தல் வரவேண்டும் என்று
மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு 3 ஆயிரம் கோடி செலவாகிறது. தேர்தல் அடிக்கடி வரக்கூடாது. ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இது. மக்கள் அரசு. இந்த அரசு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டை பெற்றது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இதில் எந்த மாற்றமும் இல்லை.
5 ஆண்டுகள் நிறைவு...
ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் இந்த அவசரம். அவரைப் பொறுத்தவரை குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். சட்டமன்றத்தைப் பிடித்து முதல்வராக வேண்டும். இல்லை என்றால் இந்த ஆட்சியே இல்லாமல் தேர்தல் நடக்கவேண்டும். இரண்டு ஆசைகளும் நிறைவேறாதவை தான். ஆனால் அவர் தேர்தலை விரும்பினாலும், அவர் கட்சி எம்.ஏல்.ஏ.க்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஒரு முறை மக்களைச் சந்தித்து ஒட்டு வாங்கி சட்டமன்றத்திற்கு வரும்போது 5 ஆண்டுகள் நிறைவு செய்யவேண்டும் என்பது தான் எல்லோரின் மனதிலும் இருக்கும். அது அவர்களுக்கே தெரியும். அவர்களுக்குச் சீட்டு கிடைக்குமா? சீட்டு கிடைத்தால் மறுபடியும் வெற்றிபெற முடியுமா என்று நினைப்பார்கள். இந்த இரண்டு பிரச்னை அவர்களுக்கு உள்ளது.
தேர்தலை விரும்பவில்லை...
இப்படிப்பட்ட நிலையில் 5 ஆண்டுகள் முழுமையாகச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும் என்று தானே நினைப்பார்கள். எனவேதான் அவர்கள் தேர்தல் வருவதற்கு விரும்பவில்லை. விரும்பாத ஒன்றை ஸ்டாலின் எந்த வகையிலாவது நிறைவேற்றவேண்டும் என்றால் அவர் ஆசை நிறைவேறாது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
கூட்டணி குறித்து முடிவு...
இதைத் தொடர்ந்து நிருபர்கள், தமிழகத்தில் பாஜக காலுன்றவேண்டும் என்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று ஆடிட்டர் குருசாமி தெரிவித்துள்ள கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்துகொண்டு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அது அவரது ஆசையாக இருக்கலாம். தேர்தல் வரட்டும். அந்த நேரத்தில் முடிவு செய்து அறிவிப்போம். யாரோடு யார் கூட்டணி என்பது அந்த நேரத்தில் முடிவுசெய்யவேண்டிய ஒன்று என்று தெரிவித்தார்.
அரசியல் செய்கிறார்கள்...
இதையடுத்து கொடநாடு விவகாரம் குறித்து கேட்டபோது, செத்தவர்களை வைத்து அரசியல் செய்வது இப்போது பேஷன் ஆகிவிட்டது. வேறு ஒன்றும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆட்சி மீது எத்தனையே குற்றம் சொல்லி, புழுதிவாரி தூற்றி பார்த்தார்கள். என்ன என்னமோ செய்து பார்த்தார்கள். முடியவில்லை. இப்போது செத்து போனவரை வைத்து அரசியல் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு இது எல்லாம் கைவந்த கலை. தினகரன் தரப்பிலிருந்தும், தி.மு.க. தரப்பிலிருந்தும் கண்டிப்பாக வரும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.