முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு விரைவில் மிகப்பெரிய சலுகைகள்: பா.ஜ.க. தலைவர் அறிவிப்பு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, விவசாயிகளுக்காக மத்திய அரசு விரைவில் மிகப்பெரிய சலுகைகளை அறிவிக்கும் என்று பா.ஜ.க. விவசாய அணித் தலைவர் விரேந்திர சிங் மஸ்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில்  அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வேளாண் கடனை தள்ளுபடி செய்வதால் விவசாயிகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுத்துள்ளது. விரைவில் மிகப்பெரிய சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படும். எனினும் அவை குறித்த விவரங்களை இப்போது வெளியிட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை பாஜக விவசாய அணித் தலைவர் உறுதி செய்துள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து